செவ்வாய், 31 ஜூலை, 2012

BEWARE OF POLICE!!

"நீர் உடனே புறப்பட்டு  கீழே குறித்த இடங்களை 'விசிட்' செய்து,  அங்கே ஏதும் குற்றம்,மது, சூது , திருட்டு போன்றவை எதுவும் நடவாமல் பார்த்திருந்தும், வெளியே இருக்கும் கேடிகள் குற்றம் எதிலும் ஈடுபடாமல் பார்த்தும் , சாயங்காலம் 5 மணிக்கு ஸ்டேஷன் திரும்ப வேண்டியது".

"என்ன இது என்று யோசிக்கிறீர்களா?  நானே சொல்கிறேன். இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. இது ஒரு போலீஸ் 'கான்ஸ்டபில் 'பீட் செல்வதற்கு அவர் சார்ஜன்ட் அல்லது ஸ்டேஷன் ரைட்டர் அவர் வைத்திருக்கும் நோட் புத்தகத்தில் எழுதி கொடுத்து அனுப்பும் குறிப்பு. இந்த நோட் புக்குடன் அவர் எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்து , அங்கங்கே இருக்கும் முக்கியமானவர்களிடமிருந்து கைஎழுத்து பெற்று , ஸ்டேஷன் செல்வார். என் அலுவலகம விமான நிலையம் என்பதால் அங்கு வருவார். என்னிடம் தினம் கையெழுத்து வாங்கி செல்வார்.

ஒரு நாள், எனக்கு வேலை ஒன்றும் இல்லாத போது , இதை படித்து ஆச்சர்யமானேன். அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.

" ஆமாம் , நீங்கள் செல்லும் இந்த இடங்களில் ஏதேனும் குற்றம் நடந்தால் ஒரு ஆளாக என்ன செய்வீர்கள்?"

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க விட மாட்டோம் சார், எங்களுக்கு தெரியும், எவன் எப்போது என்ன செய்வான் என்று. அப்படி மீறி ஏதேனும் நடந்தால் கூட ஸ்டேஷனில் புகார் செய்து FIR போட்ட உடனே ஆக்க்ஷன் எடுப்போம்" என்றார்.

சரி, உங்களுக்கு மாதம் 'இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும்' என்று  இருக்கிறதா?

அது , ஆமாம் , இருக்கிறது. 'சந்தேக கேசில் எவனையாவது பிடித்து உள்ளே தள்ள வேண்டியதுதான்.

அது எப்படி செய்வீர்கள்?

"ரோந்து வரும் பொது அவன் பூட்டிய வீட்டின் வாசலில் பூட்டை உடைக்கும் தளவாடங்களோடு பதுங்கியிருந்தான். எங்களை (போலிசை)பார்த்த உடன்  ஓட முயற்சிக்கும் போது  பிடித்தோம் என்று கேஸ்  போட  வேண்டியதுதான் ."

சரி, எல்லாரும் உள்ளூர்காரங்களகதானே இருப்பார்கள்? எப்படி கேஸ் போடுவீர்கள்?

"ஊருக்கு புதிசாக எவனையாவது தள்ள வேண்டியதுதான்!"

" அது உங்களுக்கு எப்படி தெரியும்?

" அது ஒண்ணும் பிரச்னை இல்ல சார்- இந்த பஸ்ல டிக்கட் கிடைக்காம சில பேர் லாரியில் போவானுங்க... அவனை பிடித்து கேஸ் போட்டுற வேண்டியதுதான்.

" பாவம். என்ன urgent  வேலையோ போகிறான்- அவனை பிடித்து கேஸ் போடுகிறேன் என்கிறீர்களே?

" இதெல்லாம் பாத்தா  ஆகுமா  சார்?" என்றார்.

அவ்வளவுதானா- வேறு ஏதாவது கேஸ் உண்டா ?

."கஞ்ஜா வைத்திருந்தான் என்று கூட சமயத்தில் போடுடரதுதான் "

" கஞ்சாவுக்கு எங்கே போவீர்கள்?

பொட்டலம் எங்கிட்டேயே இருக்குமில்ல? என்று காவி பல்லை பெருமையோடு காட்டினார்,

சார், நான் கிளம்பறேன்- ஸ்டேஷனில்' accused  suspect' ஐ விசாரிக்க வேண்டி இருக்கிறது. என்றார்.

" எப்படி விஜாரிபீர்கள்? என்றேன் நான்.

மயில் இறகு போடுமா சார்? நக கணுவில் ஊசி ஏற்றி விசாரிப்போம் என்றார்.

இவர்கள் விசாரணை முறையில் மகாத்மா கூட திருடினேன் என்று ஒத்துக்கொண்டு விடுவார்!

காவல் துறை இந்த லட்சணத்தில் வேலை செய்தால் ஊர் எங்கிருந்து உருப்படும் என்று எண்ணினேன்.  

"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதியார் யாரைப் பற்றி பாடினார்?என்ற என் சந்தேகம் இன்று வரை தீர வில்லை.

IN THE NAME OF GOD!


வாழ்கையில் புகழோடு இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தாம் உயர்ந்தவர் அல்லது வேறுபட்டவர் என்று காண்பிக்க வேண்டுமென்ற அவாவில் செய்யும் அறிவற்ற செய்கைகளை பகுத்தறிவு என்ற பெயரில் செய்கிறார்கள். முதலில் பகுத்தறியும் தகுதி நம்மிடம் உள்ளதா? நம் அறிவு- வரை முறைக்கு உட்பட்டது. அதை தாண்டிய விஷயங்களை நம் அறிவால் பகுத்தறிய முடியாது. இதுதான் உண்மை. அரை அடி அளப்பானால் உலகை அளக்க முடியுமா? முடியும் என்று சொன்னால் அதன் சாத்தியகூறுகள் எவ்வளவு என்பதை முதலில் " பகுத்தறிவால்" உணர வேண்டும். நாம் சொல்வதை நம்பி நம்மை தலைவன் என்று தொடர ஒரு கூட்டத்தை உருவாக்கி நம் மூட நம்பிக்கைக்கு பகுத்தறிவு என்று பெயர் வைக்க கூடாது. முதலில் அனைத்தையும் அறியும் சக்தி நம்மிடம் இல்லை. நம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் 'புதையல் தேடல்' முறைதான். முதலில் எல்லாவற்றுக்கும் விடையும் முடிவும் காண வேண்டும் என்ற எண்ணமே தவறு. இதை விட கொடுமை இதை முதலில் பரப்பியவர்களின் நோக்கம். ஆரம்பத்தில் தனக்கென்று  ஒரு கூட்டமும்  அதற்கு ஒரு கொள்கையும்  வேண்டும். கூட்டத்துக்கு ஒரு இலக்கும் தன்னை தலைவனாக கொள்ளும் மனமும் வேண்டும்.  கூட்டம் உருவான பின் அவர்களின் பொது இலக்கு ' கடவுள் எதிர்ப்பு'. எப்படியும் கடவுள் மறுப்பு செய்தி வெளியிட  மாட்டார்  இதுதான்   பகுத்தறிவு.!

சரி, உருவற்ற ஒன்றிடம் எப்படி போராடுவது? ஆகவே அதன் அடையாள குறியாக கிடைத்தவர்கள் பார்பனர்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு  அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்தானா ? ' எல்லோரிடமும் இருக்கிறது. இது சரியா தவறா? இந்த எண்ணம் மானிட இயல்பு!!

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை.

இதன் தொடராக நாம்
" அதனினும் அரிது உயர் ஜாதியில் பிறத்தல் ; அனைத்தினும் அரிது "நானாய் பிறத்தல்'
எனும் தன்னுயர்வு கொண்டு திரிகிறோம். ஜாதியில் உயரவில்லை என்றால் படிப்பில் உயர்வு  அது இல்லாவிட்டால் பணத்தினில் உயர்வு, அதுவும் இல்லாவிட்டால் அழகினில் உயர்வு. எதுவும் இல்லை என்றால்  ".ஏரியா வுட்டு ஏரியா " . ஏதோ ஒரு விதத்தில் நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து உயர் உணர்வு கொள்வதில் நமக்கு மகிழ்ச்சி.

இந்த உணர்வை உபயோகித்து பார்பனர்  , பார்பனரல்லாதோர் என்று மக்களை  இரு விதமாக பிரித்து  கொள்கைக்கு கடவுள் எதிர்ப்பை முன் வைத்து , கடவுள் பிரதிநிதிகளாக பார்பனர்களும் அவர்களை எதிர்த்தல் பகுத்தறிவு கொள்கைக்கு இயைந்ததாகவும் ஏற்படுத்தினர் நம் 'தலைவர்கள்.. உண்மையில் அவர்கள் நோக்கம் அதுதான? வாழ்கையில் நம் தலைவர்கள்  நோக்கம் வசதி பணம் புகழ் , பல தலை முறைகளுக்கு சொத்து!!  நம் தலைவர்கள் நமக்கு செய்த நன்மைகள் அல்லது தீமைகள் அனைத்தையும்  இப்போதுள்ள தலைமுறை பெருமளவு  உணர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் கொள்கை வழி நடக்கிறார்களா? இல்லை  - தனக்கென்று தனி கொள்கை வைத்திருக்கிறார்கள்! " ஊருக்கு உபதேசமடி பெண்ணே உனக்கிலை! " என்னும் கதை இவர்களுக்குகாகத்தான்.

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு ; அச்சம் என்பது மடமையடா " என்பது ஊருக்கு உபதேசம்!  தனககென்றபோது " ஐயோ கொல்றாங்களே" !!"

இந்த தலைவர்களுக்கு உங்களிடம் வேண்டியது உங்கள் ஓட்டு மட்டும்தான். அதன் பின் செய்யவேண்டியது எல்லாம் 'பகுத்தறிவு வாதிகள்' வேலை. ' நீங்க பாத்துண்டு மட்டும் இருங்க" !

நம் நேரத்தை இவர்களுக்காக செலவு செய்ய வேண்டாம். நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் முன்னேற்ற பாதையிலே பயணம்.
இவர்கள் நம் முதுகு சுமைகள். இவர்கள் பேச்சை கேட்டுகொண்டிருந்தால் நாம் " தமிழ் நாட்டு தவளைகளாக " இருக்க வேண்டியதுதான். "குண்டு சட்டியில் அவர்களுக்கு நாம் குதிரை ஓட்ட வேண்டாம்."

கடவுள் என்னும் உருவற்ற சக்தியை உணர பகுத்தறிவு ஒரு தடைக்கல்!! அந்த உணர்வு நமக்கு வரும் போது  வரட்டும். நாம் அதை அப்போது தெரிந்து கொள்வோம்.

" கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர்!"

வெள்ளி, 27 ஜூலை, 2012

TAMIZHAR PANBAADU

முடிச்சூர் ரோடு பிரிட்ஜ் அடியில் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு  வேலை வெட்டி எதுவும் கிடையாது. ஆனால் மீதி ஜனங்களுக்கு அப்படி இல்லை. எல்லோரும் பிஸி ஆகத்தான் இருந்தார்கள். காலை 6 மணிக்கே களை கட்டி இருந்தது . அதுதான் நம்மூரின் சிறப்பியல்பு. நாலு பக்கமும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். பூரா சேறும் மண்ணும். போதாததற்கு மழை காரணமாக சாக்கடை நிரம்பி வழிந்து ரோடு எல்லாம் கருப்பு சேறு . ஜனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் கூட கிடையாது. 'what cannot be avoided has to be endured ' என்ற விரக்தி சித்தாந்தத்தில் , அப்படி இருக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அனைவரும் வேகமாக போய் கொண்டிருந்தார்கள். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு போர்டு - 'கன ரக லாரிகள் காலை 8 மணிக்கு மேல் இந்த வழிக்குள் வரக்கூடாது ' என்று. ஆனால் ஒரு போலீஸ் கான்ஸ்டபில் 6 மணிக்கெல்லாம் அங்கு ஆஜர் ஆகி இருந்தார். லாரிகள் அனைத்தும்  அவரை தாண்டி நிறுத்தி, தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டி சென்றனர்.


(மேலே இருக்கும் படங்கள் நான் சொன்ன இடத்தில எடுத்ததில்லை- ஒரு பானை சோற்றுக்கு என்னும் விளக்கத்தில் பாருங்கள்)
பிரிட்ஜ் கீழே இருந்த சுவர் பூரா போஸ்டர்கள் !. 'வீரன் ஆறுமுகத்துக்கு கண்ணீர் அஞ்சலி- நண்பர்கள் ( அவர்கள் பெயர் அனைத்தும் இனிஷியலுடன்); படப்பை அருகே மலிவு விலையில் மனை- " டாக்டர் அய்யா அழைக்கிறார்"                        ( இலங்கையில் தமிழர் கொடுமைக்கு காரணமான 'ராஜபக்சே வை எதிர்த்து (அல்லது -,லோக்கல் பிரச்னைகளில் யாரை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்று இன்னும் முடிவாகாததால்) ; 'தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்- "கௌன்சிலர் எலெக்க்ஷனில் வெற்றி பெற வாய்ப்பு கொடுத்த 'அம்மாவுக்கு நன்றி-நன்றி நன்றி-; -டாக்டர் விஜயகாந்த் அழைக்கிறார்- டாக்டர் கலைஞர் அழைக்கிறார்- கடல் அலையெனத் திரண்டு வாரீர்- தமிழ் இன மான தலைவர் தொல் திருமாவளவன் அழைக்கிறார்- பக்கத்தில் ஒரு சீறும் சிறுத்தை -' 'வருங்கால பிரதமரே என நேஹ்ருவின் நேர் வாரிசு ராகுல் காந்தி படம்-( பின்னால் மூன்று நான்கு வட்டகளில் - இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி படங்கள் ) முடிவே இல்லை!

இவர்கள் நமக்கு நிஜமாகவே என்ன செய்கிறார்கள்? அவர்கள் யாரும் நம்முடன் இல்லை எனபதை இவர்கள் எங்கிருந்தோ நம்மை அழைப்பதிலிருந்தே  தெரிகிறது. அது  இருக்கட்டும். அது என்ன 'கடல் அலை போல' திரண்டு வருவது? என்றோ ஒரு நாள் 'சுனாமி' போல் திரண்டு வந்து இந்த சுவரொட்டி அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தோன்றியது. அப்போது சைக்கிளில் சுவரோட்டிகளோடு ஒரு வாளி நிறைய பசையோடு ஒருவர் வந்து  இறங்கினார். ஒரே போஸ்டரின் காப்பிகளை  அந்த பிரிட்ஜ் சுவர் பூரா ஒட்டினார் . ஏற்கனவே இருந்த சுவரொட்டிகள் மேலே.! ஒரே போஸ்டரை  ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றாக ஒட்டுவதில் என்ன அர்த்தம்? பத்தோடு பதினொன்று- அத்தோடு இது  ஒன்று என போக கூடாது- ஜனங்களுக்கு வேறு வழியில்லாமல் இந்த போஸ்டரை தான் பார்த்து உணர வேண்டும் - என இருக்கலாம்

இவை அனைத்தையும் என்னை தவிர யாரும் பார்த்து கொண்டிருக்க வில்லை. கையில் பையுடன், அல்லது TVS பைக் பின்னால் அவர்கள் ஸ்கூல் குழந்தைகளுடனும், அவரவர்கள் வேலையே கண்ணாக போய் கொண்டிருந்தனர்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். ஒரு சின்ன கோயில் - மக்கள் நிறையவே இருந்தார்கள். ஒரு ரோடு கடை- இட்லி தோசை கடை- கடைக்காரம்மா முதல் ஈட்டில் எடுத்த இட்லிகளை காக்காய்க்கு கூரை மேல் வைத்தார்கள். நம்மூர் நம்மூர்தான்- எவ்வளவு வேண்டுமானாலும் கத்து." சொரணை கெட்ட தமிழன் ", "சோற்றால் அடித்த பிண்டம் "  "வாழை மட்டை"  இன்னும் மனதில் என்னென்னமோ கற்ற உன்  தூய தமிழில் 'துப்பு'!     ஆனால் நம் ஜனங்கள் மாற மாட்டார்கள்-நல்லவர்கள்-கோவில் போவார்கள்- மசூதி செல்வார்கள்- சர்ச் போவார்கள்.இரக்க உணர்சியோடுதான் இருப்பார்கள்.  தப்பு தவறு அங்கங்கே நடந்தாலும் உதவிக்கு நிச்சயமாக வருவார்கள்.(போலீஸ் தொந்தரவு இல்லாமல் இருந்தால்). 'தமிழர் யார் என்று நீங்கள் நிச்சயிக்க வேண்டாம். ராஜ ராஜ சோழன் விழா- எப்போது பிறந்தான்? தெரியாது - உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டன்  பெயர் என்ன? என்னவாக இருந்தார்? சத்தியமாக தெரியாது.'சுத்தமான தமிழை இன்னும் பேசும் சேர நாட்டவர் தமிழரா அல்லரா?
சொல்ல மாட்டீர்கள்... திராவிட நாட்டின் எல்லைகள் என்ன ? அது  குழப்பமான விஷயம் . தமிழ் பேசிய பாரதியாரை-ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பெரியவரை  தமிழரல்ல என்பீர்கள்! ராமன் ஆரியன் என்று புராணத்தில் படித்து விட்டு ராவணன் திராவிடன் என்பீர்கள்.ராமன் 'சோம ரசம் குடித்தாரா  அல்லது பூண்டு ரசம் குடித்தாரா என்னும் விவரத்தில் உங்கள் புலமையை காட்டுவீர்கள். ராவண லீலா கொண்டாடுவீர்கள். இராவணன் சிங்கள நாட்டினன்.. . அப்போது அங்கு இருக்கும் சிங்களவர் அனைவரும் திராவிடரா?"தொப்புள் கொடி உறவு " என்று பந்தம் கொண்டாடும் நீங்கள் அவர்கள் அவலத்தில் அரசியல் செய்வது உலகறிந்த உண்மை - அவர்களுக்கும்  நன்றாக தெரியும்... சொந்த வரலாறையே சுத்தமாக அறியாத   நீங்கள்' வந்தவர் 'வரலாற்றை பற்றி வாய் கிழிய பேச வந்து விடுவீர்கள்.  . தன்மான இனம் பிரித்து தமிழர் அடையாளம் காட்ட  தயங்காமல் வந்து  விடுவீர்கள்.

நம் ஜனங்கள் நல்லவர்கள். அவர்கள் கவலைகளையும்  கஷ்டங்களையும் நீங்கள் என்ன அறிவீர்கள்? அவர்கள் மலர் கிரீடம் தரித்திருக்கும் மன்னர்கள் இல்லை. 'கும்பி எரியுது குடல் கருகுது - உனக்கு "குளு குளு " கார்  ஒரு கேடா? என்று ஆட்சியில் இருந்தவரை விமரிசனம் செய்த  நீங்கள் '" பக்தவச்சலம் அண்ணாச்சி - பருப்பு விலை என்னாச்சி என்று பரிகசித்த நீங்கள்,  உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? 'பக்தவச்சலம் குரங்கே- பதவியை விட்டு இறங்கேன் ! என்று போஸ்டர் ஒட்டியவர்கள் நீங்கள். இதுதான் தமிழர் பண்பாடா? " பெரும் தலைவர்- வாழ்நாள் பூரா வாடகை வீட்டில் இருந்தவரை- " காமராஜர் முதுகு  தோலை  உரித்தால் இரண்டு டமாரம் பண்ணலாம் என்று விமரிசதவர் நீங்கள். " இதுதான் நம் பண்டைய கலாசார பண்பா?அடுத்தவரை குறை கூறினால் நீங்கள் உயர்ந்தவர் என்று அர்த்தம் கிடையாது.  நம் மக்களை நீங்கள்  தொந்தரவு செய்யாமல் விட்டாலே தமிழ் நாடு நிச்சயம்  முன்னே வரும். 'சிந்துபாத் மீது சவாரி செய்த கிழவன் போல் அவர்கள் முதுகில் நீங்கள் சவாரி செய்யாமல் இருந்தாலே  அவர்கள் எதிர் காலம் நன்றாக இருக்கும். கால் பிடித்து இழுக்கும் சுயநல தவளைகளாக நீங்கள் இருப்பதால்தான் அவர்கள் முன்னேற்றம்  தடை படுகிறது..

அவர்களை வாழ விடுங்கள்; .

KURANGU BASKAR !!

குரங்கு பாஸ்கர் HDFC  பேங்க்  அருகில் (ஒரு மரத்தடியில்) நின்று கொண்டிருந்தான். ஏதோ பாங்கில் அக்கௌண்டில் பணம் போடவோ எடுக்கவோ நின்றிருந்தான் என எண்ணாதீர்கள் . தன்னுடைய 'இரை 'க்காக காத்திருந்தான். அவன் குறி எப்போதும் தப்பியதே இலலை . குரங்கு என்று அவனுக்கு காரணப்பெயர் போலீஸ் காரர்கள் அன்புடன் வைத்திருந்தனர். கையில் வைத்திருக்கும் பணப்பையை குரங்கின் லாவகத்துடனும் வேகத்துடனும் பிடுங்கிக்கொண்டு ஓடினானாகில் அவனை பிடிக்க இன்னொரு குரங்குதான் வர வேண்டும். பறி கொடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் முன்னே குரங்கு பாஸ்கர் மறைந்து விடுவான். அவனுக்கும் போதாத காலங்களில் மாட்டிகொண்ட போது தர்ம அடி வாங்கிக்கொண்டு போலிசிடம் பிடி பட்டிருக்கிறான். அவனுக்கும் இப்போது வயசாகிறது. ஒரு தடவை போலீஸ் கேஸ் ஆகி ஜெயிலுக்கு போய் விட்டால் மறுபடியும் போவதற்கு தப்பு செய்ய வேண்டும் என்ற அவசியமே நம்மூரில் இல்லை. தீராத திருட்டு கேஸ்களை இவனை மாதிரி ஆஸ்தான கேடிகள் மீது சுமத்தி போலீஸ் அவ்வப்போது இவனை ஜெயில் விருந்தாளி ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் குரங்கு பாஸ்கர் பயப்படுவதே இல்லை. அவனே சமயத்தில் அவர்களை தன மேல் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளும்படி கேட்டு கொள்வான். அதற்கு அவனுக்கு காசு கூட கிடைக்கும்!    அப்புறம் 'போலீசுக்குஆதரவாக ' பொய் சாட்சி சொல்லி காசு பண்ணுவான்.'தொழில்  ரகசியங்களையும் ஜெயிலில் சக கேடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். ஜெயில் பல சமயங்களில் 'vocational training college 'ஆகத்தானே நடக்கிறது? அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் அவர்கள் வெளியே வரும்போது இரண்டு விரல்களை உயர்த்தி 'V '( எனக்கு 'வெட்கம் இல்லை என்பதின் அடையாளமாக!) காண்பித்து ' தொண்டர்களுடன் ' செல்வார்கள். பாவம், குரங்கு பாஸ்கருக்கு அந்த  மாதிரியெல்லாம் அந்தஸ்தும் இல்லை- ஆட்களும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை.சரி, நம் கதைக்கு விட்ட இடத்திலே வருவோம்.


பணத்தை பறி கொடுக்கவென்றே சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பாங்கிலிருந்து பணத்தை 'மஞ்சள் பையில் 'தான் வைத்து எடுத்து செல்வார்கள்.ஏன் என்று கேட்காதீர்கள். தமிழர் பண்பாடோ என்னமோ தெரியாது. நம் குரங்கின் குறியெல்லாம் அவர்கள்தான். இவனுக்கேன்றே பணம் 'withdraw ' செய்து இவனிடம் கொடுக்க வந்தாற்போல் நடந்து கொள்வார்கள் . சரியான் 'வசூல்' நாட்களில் குரங்கு பாஸ்கர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு  'தொழில்' செய்ய வேண்டிய வேலையே இருக்காது. அந்த நாட்களிலெல்லாம் 'வோட்காவ'  ஊத்திகினு ஓடியாடி' பாடுவான் . 


இன்று 'புதன்' கிழமை. குரங்கு பாஸ்கருக்கும் இன்றுதான் நல்ல நாள். மாதத்தின் முதல் வார புதன் கிழமை விசேஷமான நல்ல நாள். 'மஞ்சள் மகிமைக்காக' காத்திருந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை. ஒரு வயதானவர் 'மஞ்சள் பையுடன்' பாங்கிலிருந்து வெளிப்பட்டார். அவர் வெளியே வந்து தன் தோளில் போட்டிருந்த துண்டால் முகம் துடைக்க முற்படுகையில் 'மஞ்சள் பை' கை மாற குரங்கு பக்கத்து சந்து வழியாக ஓடி மறைந்தான். 'பை' கொஞ்சம் கனமாக இருந்தது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ் ஏறி மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு டிக்கெட் வாங்கினான். 'அப்பாடி ' இன்று நல்ல வேட்டைதான். ஆண்டவன் புண்ணியத்தில் மகத்தான மகசூல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.


மெதுவாக பையினுள் கையை விட்டு நுழைத்து பார்த்ததில் மூன்று கட்டு கரென்சி இருந்ததை உணர்ந்தான். 'எவ்வளோ காசு, பேசாம ஒரு கடை வைத்து விடலாம்' - அப்படியே படிப் படியாக முன்னேறி அரசியல்' செய்து' ஒரு நல்ல 'பொசிஷன் ' வந்து  விட்டால்  பின்னர் குரங்கு அடை மொழியை விடுத்து , 'டாக்டர பாஸ்கர் ' என தொண்டர்களை விட்டு கூப்பிட சொல்லலாம். " டாக்டர் அழைக்கிறார் - அலை கடலென திரண்டு வாரீர்! என்று போஸ்டர் ஒட்டும் நாளை எண்ணி கனவு  கொண்டிருக்கும்போது  மெயின் பஸ் ஸ்டான்ட் வந்து  விட்டது. கனவுகளோடு இறங்கிய குரங்கு பாஸ்கருக்கு போதாத காலம் போலீஸ் உருவில் கீழே காத்திருந்தது . " இதோ பாரு 307, கும்பிடப்போன  குரங்கு குறுக்கே வந்திருக்கு பார் - வாடா , உன்னை எங்கெல்லாம் தேடுறது , வா போலாம்' என்றார் 347. 'சார், நான் வீடு வரைக்கும் போய் விட்டு வருகிறேன்- அர்ஜென்ட் வேலை இருக்கிறது- என்று நழுவப்பார்த்த கு.பாஸ்கரை அவர்கள் விடுவதாயில்லை. 'அதெல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம்- கோர்ட்டுக்கு இப்போது போக வேண்டும்- ஒரு முக்கியமான கேசில் நீ நம்ம லோக்கல் தலைவருக்கு (தாதா) பதிலாக உள்ளே போக வேண்டும்- அவருக்கு கவுன்சிலர் எலெக்சன் வேலை இருக்கிறதாம்! என்றார் 307. போச்சுடா சாமி எல்லாம் என்று தன 'ஜாதகத்தை' நொந்து கொண்டு கு.பாஸ்கர் போலீஸ்காரர்கள் பின் சென்றான். 10 நிமிஷ வேக நடைக்கு பின் மூவரும்  போலீஸ் ஸ்டேஷன் சென்றடைந்தனர் .


'என்ன கிடைச்சுட்டானா - வாடா குரங்கு, உன்னையெல்லாம் போய் தேடி பிடிக்க வேண்டியதாகி விட்டது பார்-' என்று வரவேற்றார்- ரைட்டர். "சட்டை பான்ட் எல்லாம் கயட்டி வைத்துவிட்டு உள்ளே போ- அது என்ன பையில் ?-பாரு 307?  சார் ரைட்டர் சார், இவன் பையில் 3 கட்டு 500ரூ இருக்கிறது சார்- எங்கோ அடித்திருக்கிறான்- என்றார் 307-"  " அடி வயிற்றில் ஒரே சமயத்தில் ஐஸையும் நெருப்பையும் ஒன்றாக உணர்ந்தான். குரங்கு பாஸ்கர். -" சரி சரி நல்லதா போச்சு - காசையும்  கொடுத்து கேசையும்  ஒத்துகிட்டு-  பார் உள்ளே போறான் பார் - என் நண்பேன் 'என்று தொடை தட்டி  சிரித்தார் ரைட்டர் .


" பிச்சை எடுத்தாராம் பெருமாள் - அதை புடுங்கிண்டாராம் இந்த அனுமார்"!! என்று சொல்லி ஆரவாரமாக சிரித்தார் 307. அதை வழி மொழிந்து  பின்சிரிப்பு செய்தார் 347. 


பெருமாள் யார் இதில் அனுமார் யார் என்று புரியாத  குரங்குக்கு தாங்க முடியவில்லை . " அந்த பழமொழி சொன்ன காலத்தில் போலீஸ் இல்லை  " என்றான். " என்னடா முனகல் ? இன்ஸ்பெக்டர் வரார் இப்போது- கோர்டுக்கு நேரமாச்சு " போடா  உள்ள "  'என்று அவனை நெட்டி உள்ளே தள்ளினார் 347.  



வியாழன், 26 ஜூலை, 2012

SEA IS FULL OF FISH !!

"கிட்டாதாயின் வெட்டென மற "  என்கிறது நமது தமிழ் பழ மொழி.
" If You love something , set  it free , if it comes back ,its yours , if not, it was never yours from the beginning " என்கிறார்  Rachel Thompson .


என் விஷயத்தில் இந்த அறிவுரையின் தேவை எதுவுமில்லாமலே நான் இருந்தேன்.என் இள வயதில்  நான் காதலித்த பெண்ணை  என் ப்ரெண்டும் காதலித்தான் .  என்னிடமே அவளை எப்படி 'பட்டாய்கலாம் ' என அட்வைஸ் வேறே கேட்பான். என் மற்ற பிரெண்ட்ஸ் என்னிடம் " உனக்கு மூளை இருக்கிறதா ? அவனை ரெண்டு போடாமல் அவனுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறாயே " என்பார்கள். என் பதில் ஒன்றுதான் . " எனக்கு இருக்கும் உரிமை அவள் கல்யாணம் ஆகும் வரை அவனுக்கும் உண்டு. அவளுக்கு என்னிடம்  விருப்பம் இருந்தால் அவன் என்ன செய்ய முடியும். அப்படி அவளுக்கு அவனிடம் அல்லது வேறு யாரிடமோ விருப்பம் ஏற்பட்டால் அது இப்போதே நடக்கட்டும். " என்பேன்.

எங்கள் அலுவலகத்தில் எங்கள் சீனியர் கிளேர்க் இருந்தார்.  . இவன்; அவரிடம் சென்று தனக்கு உதவி செய்ய கேட்டான். விவரம் தெரியாத அவரும் அவள் இருந்த ஆபீஸ் வரை சென்று விட்டு ( ஒன்றும் கேட்காமலேயே) வந்தார். இவனுக்கு ஒரே ஆர்வம். " என்ன சொன்னாள் சார் ?" என்று ஆவலுடன் கேட்டான். " முதலில் கையை கொடு, என்று குலுக்கி விட்டு , " உன்னை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் , ஆனால்  நீ சிகரெட் பிடிப்பதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை" என்றார். எனக்கு ஒரே ஷாக்; இருந்தாலும் மேலே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. சரி, இதை இப்போதே செலேப்ரெட் செய்ய வேண்டும் என்றான் . நான் அவள் இருந்த ஆபீஸ் சென்று அவளிடம் இதை கேட்ட போது அவளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. " இந்த கூத்தை நீங்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்தீர்கள; உங்களுக்கே என் மேல் அன்பு இல்லை  என்று என்மேல்  எரிந்து விழுந்தாள் .

பெண்களுக்கே உரித்தான் அர்த்தமில்லாத சந்தேகத்தில் அவள் என்னிடமிருந்து பின்னர் விலகினாள் . நான் ஒரு காதலியிடம் காட்ட வேண்டிய அளவு அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை என அவள் எண்ணி இருக்கலாம்.  ஆனால் பெரும்பாலான பெண்கள் புகழ்ச்சி வார்த்தைகளுக்குத்தான் நம்பிக்கை வைப்பார்கள் என எனக்கு அப்போது தெரியாது. இப்போதும் புரியவில்லை.தெரிந்திருந்தாலும்  என் இயறகையான குணம் யார் பின்னாலும் போவதல்ல . போகட்டும், நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு வருடம் கழித்து அவள் என் பிரெண்டையே கல்யாணம் செய்தாள் . முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . பின்னர் இதனால் ஏற்பட்ட வலியை மறந்து விட்டேன். இதை படிப்பவர்கள் என்னை பற்றி என்ன எண்ணுவார்கள் என்பதையும் இப்போது நான் யோசிக்கவில்லை . நான் சொல்ல வந்தது எப்படி காதலிக்க வேண்டும் என்பதல்ல. நம்மை ஒருவர் ஒதுக்கி வேண்டாம் என்பதை கூட சொல்ல தேவை இல்லை ; போடா போடா புண்ணாக்கு என்று நடத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.


தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற் பயிற்சி செய்ய செல்வேன். அதை காலை 4 மணிக்கு மாற்றினேன். வேலை இடம் மாறுதல் செய்தேன். எனக்கு பிடித்தமான விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினேன். அவளை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் ஆக்கி கொண்டேன். விரைவில் அந்த உறவின் வலியை மறந்தேன் . 


கடவுள் ஒருவரை தவிர்த்து யாரும் நம்மிடம் 100% அன்பு காண்பிக்க மாட்டார்கள் ; நாம் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையும் அன்பும் வைத்து ஏன் அடி வாங்க வேண்டும். ஒரு முறை என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது , என் நண்பன் அவன் காலேஜ் ப்ரொபசர் " பிள்ளைங்களை  நம்பாதீங்கடா - விளக்கு காட்டி கூட்டிகிட்டு   போய்  குளியில் ( குழியில் ) தள்ளிடுவாங்க " என்றார் என்று சொல்லி சிரித்தான் . கூட இருந்த பெண் நண்பி " தள்ளுவதோடு நிறுத்தமாட்டோம்  " அவள் பாவம் அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்- நான்தான் குழியில் குதித்தேன் " என்று சொல்ல வைப்போம்"  என்றாள்!! 


உண்மையில் நம் மேல் உண்மையான  அன்பு இல்லாதவர்கள் , ( ஆண்/பெண்)  நம் வலியில் அவர்களின் வலிமையைதான் உணர்வார்கள். அவர்கள் மகிழ்ச்சிக்கு நாம் தீனி போடுவது தேவை இல்லாத வேலை. ' என் வழி தனீ வழி " என்று செயல் முறையில் காண்பிப்பது அவசியம். நம்மையே யாருக்கும் படையல் ஆக்க வேண்டிய தேவை இல்லை. 'சமுத்ரம் முழுக்க மீன்கள்! 


புரிந்ததா? 

NIGERIAN NEWS!!

ஐந்து  பேர் சேர்ந்தார்கள் என்றால் அனைத்தையும் ஒழித்து விடுவார்கள் என்று  மகாபாரதத்தில் தெரிந்து கொண்டோம். தமிழ் படங்களில் ஐந்து விரல்களையும் ஒன்றொன்றாக சத்தம் வருமாறு மடித்து ஹீரோ குத்தும் போது அதன் சக்தியை உணர்கிறோம். ஐந்தாம் படை, ஐந்தில் வளையாதது ,என ஐந்தின் அளவற்ற சக்தியை பயத்துடன் தெரிந்து உணர்கிறோம். சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறீர்களா ? சொல்கிறேன்.

இன்று காலை," Times of India " வில் ஓர் செய்தி.  ஐந்து மனைவிகள் சேர்ந்து தங்கள் கணவனை கற்பழித்து கொன்றார்களாம் . காரணம் அவன் தன் ஆறாம் காதலிக்கு அதிகமான் அன்பும் அக்கறையும் காண்பிததுதான் . அவன் ஆறாம் மனைவியோடு இருந்த போது மீதி ஐந்து பேரும் கத்தி கபடா உடன்  களமிறங்கி தங்களையும் ' திருப்தி ' செய்ய வேண்டும் என்று அவனை மிரட்டி பணிய வைத்தார்களாம் !  இதன் விளைவு அவன் ஐந்தாம் மனைவியின் 'முறை ' வந்த போது அவன் உயிர் போய் விட்டது! அவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். அடுத்த நாள் அவர்களில் இரண்டு மனைவியரை போலீஸ் கைது செய்தனர் என்று  NIGERIA வின் Daily Post தெரிவிக்கிறது.

ஆபரேஷன்  சக்செஸ்  பேஷண்ட் collapsed என்னும் பழமொழியை அவன் ஐந்து மனைவியரும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

இதே நாளிதழில் அடுத்த பக்க செய்தி Nigeria நயவஞ்சகன் ஓர் பெண்ணை ஏமாற்றி 22 லட்சம் சுருட்டிய விஷயம். செவ்ரோன் ஆயில் கம்பெனி UK விடமிருந்து அந்த பெண்ணிற்கு 85000pounds prize என்று SMS அனுப்பி 22 லட்சம் பரிசு பணத்தை மாற்றுவதற்காக சொன்னதின் பேரில் அந்த பெண்ணும் 22 லட்சம் ரூ கட்டியிருக்கிறார்கள். வந்து சேர்ந்தது என்னமோ ஒரு டெபிட் கார்டு மட்டும்தான். அதன் மூலம் பணம் கிடைக்காத அந்த பெண் கேட்டதிற்கு அவர்களை இன்னும் ஒரு 1.5 லட்சம் செயல் தடங்கல்  ஒன்றை சரி செய்வதற்கு கேட்டிருக்கிறான். சந்தேகம் வந்த அந்த பெண் போலீசிடம்  புகார் செய்ய, பிடி பட்டான் அவன். எனக்கு இந்த மாதிரி நிறையவே ஈ-மெயில் வந்திருக்கின்றன. வாரிசு இல்லாத ஆப்ரிக்கா ராஜா ஒருவர் 25 மில்லியன் dollor  விட்டு சென்றதாகவும் அதை நான் பெற்றுக்கொண்டு அவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் ஈ-மெயில். இதற்கு பதில் அளித்தால் உடனே அந்த பணத்தை மாற்ற நான் 5 லட்சம் அனுப்ப வேண்டும் என பதில் வரும். ஏமாந்தவர்கள் எத்தனையோ. முடிவே இல்லை. இன்னும் நடக்கிறது. என் மகனுக்கு கனடாவில் 8200 $ மாத சம்பளத்தில் ஒரு on -line interview நடத்தி உடனே வேலை உத்திரவும் வந்து விட்டது. விசா வாங்க வேண்டுமென்றால் Rs 34000/- அவர்கள் சொல்லும் அக்கௌன்டிற்கு அனுப்ப வேண்டும் என எ-மெயில். சரி, அக்கௌன்ட் நம்பரும் பெயரும் கேட்டால் , ஒரு nigeriian  பெயரும் Union Bank அக்கௌன்ட் நம்பரும். எத்தனை பேர் அனுப்பி இருப்பார்களோ !!

வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அனைவரும் இந்தியர்களை , முக்கியமாக தென் இந்தியர்களைத்தான். நம்பி இந்த மோசடியை நடத்துகிறார்கள். போதாததற்கு Drug smuggling வேறே. Nigerians அனைவரும் இப்படிதானா ? தெரியவில்லை.

ஒன்று நிச்சயமாக புரிகிறது. இந்த விஷயம் மட்டும் இல்லை. நம் மனது ஆசையின் வசம் சிக்கும் போது அறிவின் செயல் திறனிழந்து விடுகிறது. எல்லா விஷயங்களிலும் 10% சந்தேகம் எப்போதும் வைத்திருந்தால் ஒருக்கால் இந்த குழிகளிலிருந்து தப்பலாம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

PLEASURES OF LIFE


What is your routine in the morning when you get up from bed ? you brush your teeth, have a steaming cup of filtered coffee and look sideways whether the news paper has been delivered, and if so, whether it is not ruffled up. Pleasure of reading is lost, if some one else had read the news paper before you, right ?
Read the newspaper according to your taste and attitude in life which set the priorities for reading pleasure. Then what ? You are probably getting late for your 'office'. Take a quick bath, munch a hurried breakfast and rush to your office blending in the mad rush of traffic.
Reached your office right ? ( Identify all those staff who do not greet you and make a mental note of that. ) Get into your cabin and after a mindless prayer to no useful purpose, switch on your computer to check your e-mails !
Expected ! One more day to wage a war on e-mail accusations on your lack of skill in running the office and your hot headed replies to squelch the stupid accusations and end up with a sense of anger and of course, increasing blood pressure. Every one tries to project himself to prominence and what other better way could it be than blaming others for their lapses. Build a pyramid of files on them , brick by brick and bury their growth aspirations ! After all, in the rat race ( No offence to rats ) to reach your status and prominence, you need to do all these !
The remaining day is spent in attending / conducting meetings, where the only purpose is to make others understand your point of view and accept you as the team leader. You look forward to dictating the minutes of meeting with the sole purpose of projecting your visions. Copy them all to top management and relax ; 80 % of the day's work is now over. Now is the time for small talk, with your 'team' of confiding colleagues to conspire, on possible chances to upgrade your position.
The day in office is over ! It is time to get back home, have a wash, down two pegs of your favourite whiskey, gulp your dinner and dump yourself to your bed !
What an wonderful life ! Can you differentiate one day from the other, while the agenda is the same and the attitude and activities are same ! All you need in life is recognition with the highest possible status and a sound financial back-up. Everything else in life is secondary !
Come on, I shall show you something else in life. Get up and come with me, holding my hand, for a silent morning walk in the glades after a fresh early morning rain. Smell the freshness of green rain forest. Listen to the chirping of small birds perching on the branches of the tall and gigantic trees. Enjoy the rustle of leaves, spray of hanging droplets of rainwater on your face with the breeze welcoming you into this forest, the eerie music from the bamboo trees, the beauty of the silent stream with clear and icy chill water and the early morning breeze. What is this world, here, full of beauty and abundant joy? Sit down with me on the bank of this rivulet and dabble your feet in the clear water! Oh ! what a joy ! Can you feel a group of fishes nibbling at your feet ? What do they want ? Enjoy all this, but there is a condition. Leave your age and status behind. Your placement in the society makes no sense here. You must come as small boy or a girl, not more than 10 years old, without any inhibitions of a scheming mind! Is it possible ? YES, IT IS. ` Denizens of this forest do not
understand your status which is not your LIFE. It is your existence. Forget it. Be happy with me in this small tour and while you are at it, forget me as well ,and be to yourself.
But, then, how many times it could be possible to take a tour like that ? It is possible, eternally, with your MIND POWER.
Have you ever slept on the open terrace and watched the shining moon and the glistening stars ? What do they say silently ? Why do the stars appear in the same place and in the same shape every day ? Who ensures this discipline ? What is the size of the milky way in the millions of galaxies in the endless space out there ? What are the possibilities of existence of other planets like earth or anything better than that ? Will they support life system and if so, how they will look like ? Can we reach them, defying the proven speed of travel ? Enjoying all this is possible, with your mind power which is as unlimited and fathomless as the outer space !
I shall leave you to enjoy yourself and come back to you after some time, right ?